» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகளில் ஒருவருக்கு அரசு வேலை: எ.வ.வேலு
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:45:33 AM (IST)
சங்கராபுரம் அருகே பெற்றோரை இழந்து தவிக்கும் 4 குழந்தைகளை அரசு கைவிடாது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கமலக்கண்ணன் (46) சிறுநீரக நோயால் கடந்த 14-ந்தேதி அன்று உயிரிழந்தார். அவருடைய மனைவி வசந்தா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.இந்த நிலையில் கமலக்கண்ணன் உடலை அடக்கம் செய்வதற்கு பணம் இல்லாமல் அவருடைய மகள்கள் லாவண்யா (24), ரீனா (21), ரிஷிகா (17), மகன் அபினேஷ் (13) ஆகியோர் பரிதவித்தனர். அவர்கள் குடும்ப வறுமையை கண்டு கிராம மக்கள் வீடு வீடாக பணம் வசூலித்து கமலக்கண்ணனின் இறுதி சடங்கை செய்தனர்.
நெஞ்சை உருக்கும் இந்த செய்தி பத்திரிகையில் நேற்று வெளியானது. இந்த செய்தி பலரது மனதை கலங்கடிக்க செய்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இந்த செய்தியை படித்து பார்த்து கலங்கி உள்ளார். உடனே அவர், கமலக்கண்ணின் மூத்த மகள் லாவண்யாவிடம் செல்போனில் உருக்கமாக பேசி ஆறுதல் கூறி தன்னம்பிக்கை அளித்தார்.
மாணவி லாவண்யாவுக்கு செல்போனில் ஆறுதல் கூறிய உரையாடலை சமூக வலைத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அத்துடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்த 4 குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள். அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும். இந்த செய்தியை படித்ததுமே, மாவட்ட கலெக்டரை அழைத்து அவர்களது தேவைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிய சொன்னேன். நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து அமைச்சர் எ.வ.வேலுவும் நேரில் அவர்களை சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: லாவண்யா அரசு வேலை இருந்தால் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ரீனா ஐ.டி. படித்து இடையில் நின்றுள்ளார். அவரும் படிப்பை விரும்புகிறார். ரிஷிகா 10-வதோடு இடையில் நின்றுள்ளார். அவரும் படிப்பை தொடர விரும்புகிறார். அபினேஷ் படிக்க விரும்புகிறார்.
மாவட்ட ஆட்சியரும் நானும் ஆலோசனை நடத்தி, ரிஷிகாவையும், அபினேஷையும் அன்புக்கரங்கள் திட்டத்தில் சேர்த்து படிக்க வைக்க உள்ளோம். ரீனா ஐ.டி. படிப்பை தொடருவார். அரசு சார்ந்த அலுவலகத்தில் தற்காலிக பணி கொடுக்க முடிவு செய்துள்ளோம். பிறகு நிரந்தர பணி ஏற்பாடு செய்யப்படும். அரசு சார்பாக இந்த பணிகளை செய்துள்ளோம்.
அந்த குடும்பத்தினரின் பொருளாதார இழப்பை ஈடுசெய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் பொருளாதார உதவி அளித்துள்ளோம். இந்த குடும்பத்தை பொறுத்தவரை முதலமைச்சரின் ஆலோசனைப்படி அரசு சார்பாக என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அந்த உதவிகளை செய்வோம். எந்த காரணத்தை கொண்டும் இந்த குழந்தைகளை அரசு கைவிடாது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 12:04:17 PM (IST)

புதுக்கோட்டை அருகே தனியார் பஸ்சில் ரூ.4½ கோடி உயர் ரக போதைப்பொருள் சிக்கியது!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:59:09 AM (IST)

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம்: தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:24:55 AM (IST)

கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா தொடங்கியது: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:24:50 AM (IST)

வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
திங்கள் 17, நவம்பர் 2025 8:29:35 PM (IST)

மாநில ஹேக்கத்தான் இன்னோவேஷன் போட்டி: தூத்துக்குடி ஸ்பிக்நகர் பள்ளி மாணவர்கள் சாதனை!
திங்கள் 17, நவம்பர் 2025 5:49:10 PM (IST)




