» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போலீசார் - கம்யூனிஸ்ட்டுகள் இடையே வாக்குவாதம்: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
திங்கள் 19, ஜனவரி 2026 12:30:40 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். ஆட்சியர் அலுவலக வாயில் அருகே நின்று பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வாகனம், போக்குவரத்தில் சிக்கியது.
இதனால், ஆத்திரமடைந்த போலீசார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை நிற்க விடாமலும், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்க அனுமதி மறுத்தனர். இதனால், இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமாதானம் ஏற்பட்டதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனர். மனு அளித்த பிறகு மாற்று இடத்தில் பத்திரிகையாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேட்டியளித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மக்களை இரையாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: இபிஎஸ் குற்றச்சாட்டு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 10:22:25 AM (IST)

செண்பகவல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா : யாகசாலை பூஜைகள் நாளை துவக்கம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:11:08 AM (IST)

மாமனாரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது : குடும்பத்தகராறில் வெறிச்செயல்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 7:59:35 AM (IST)

பொங்கல் விடுமுறை: விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 4 நாட்களில் 72,464 பேர் பார்வை...!
திங்கள் 19, ஜனவரி 2026 9:05:50 PM (IST)

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பேரணி : விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
திங்கள் 19, ஜனவரி 2026 5:29:47 PM (IST)

ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வை வேடிக்கை பார்க்கும் திமுக அரசு : பாஜக குற்றச்சாட்டு
திங்கள் 19, ஜனவரி 2026 5:22:41 PM (IST)

