» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் எரிவாயு இருப்பு நிலவரம் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆலோசனை!

வியாழன் 12, மார்ச் 2026 3:45:11 PM (IST)



எரிவாயு விநியோக நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோல் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் - மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் காணொளி வாயிலாக கூட்டம் நடத்தினார்

தற்போதைய சூழலில் எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை செயல்பாடுகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய எரிவாயு விநியோக நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோல் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், காணொளி வாயிலாக இன்று (12.03.2026) கூட்டம் நடத்தி தங்கு தடையின்றி எரிவாயு விநியோகம் செய்யத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இலட்சத்து 13 ஆயிரத்து 97 வீட்டுச் சமையல் எரிவாயு இணைப்புகளும் 13 ஆயிரத்து 142 வணிக எரிவாயு இணைப்புகளும் உள்ளன. இதில் உணவகங்களுக்கு 6 ஆயிரத்து 309 இணைப்புகளும், தொழில் நிறுவனங்களுக்கு 49 இணைப்புகளும், சுகாதார துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்ந்த விடுதிகளுக்கு 1,026 இணைப்புகளும் மற்றும் இதர பயன்பாடுகளுக்கு 5 ஆயிரத்து 758 இணைப்புகளும் அடங்கும்.

மேலும், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் டீசல் இருப்பு 2337 கிலோ லிட்டர் மற்றும் பெட்ரோல் இருப்பு 1671 கிலோ லிட்டர் இருப்பு உள்ளது என எரிவாயு விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள எரிவாயு இருப்பு மற்றும் விநியோகம் தொடர்பான விவரங்களை அன்றாடம் தெரிவிக்க வேண்டுமெனவும், முக்கியமாக முதலமைச்சரின் காலை மற்றும் மதிய உணவுத் திட்டம், பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் விடுதிகள், தொழிற்சாலை அருகில் அமைந்துள்ள உணவு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு தங்கு தடையின்றி எரிவாயு உருளை விநியோகம் செய்யுமாறு சம்பந்தபட்ட எரிவாயு நிறுவனங்கள் மற்றும் அரது துறை சார்ந்த அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் தட்டுப்பாடு ஏற்படும் நேர்வில் அது குறித்த தகவல்களை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory