» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்களிடையே பயங்கர மோதல்: கல்வீச்சு தாக்குதலில் 5பேர் காயம்!
திங்கள் 6, ஜூலை 2026 12:01:28 PM (IST)
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் கல்வீச்சில் 5-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்வதற்கு என்று குறிப்பிட்ட வழக்கமான நேரக்கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், இன்று வழக்கமான நேரத்தை மீறி சில விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது படகுகளுடன் கடலுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்குத் துறைமுகத்தில் இருந்த மற்ற மீனவர்கள் தங்களது பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதனால் இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், நேரம் செல்லச் செல்ல முற்றிப்போய் திடீரென இருதரப்பு கல்வீச்சு தாக்குதலாக மாறியது. துறைமுக வளாகத்தில் மீனவர்கள் பரஸ்பரம் கற்களை வீசித் தாக்கிக் கொண்ட இந்த பயங்கர வன்முறையில், 5-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உடல் மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விசைப்படகு உரிமையாளர்களின் இந்த விதிமீறல் மற்றும் தாக்குதலைக் கண்டித்து, நேரக்கட்டுப்பாட்டை மீறிச் சென்ற விசைப்படகு உரிமையாளர்களுக்கு எதிராகச் சின்னமுட்டம் மீனவர்கள் அனைவரும் திரண்டு உடனடியாகத் தங்களது மீன்பிடி தொழில் மற்றும் பணிகளைப் புறக்கணித்து அவசர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சின்னமுட்டம் துறைமுக வளாகம் முழுவதும் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், திரண்டிருந்த மீனவர்களுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீனவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். தற்போது துறைமுகப் பகுதியில் நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? - கல்வெட்டு விவகாரத்தில் திமுக கடும் தாக்கு!
திங்கள் 6, ஜூலை 2026 12:50:06 PM (IST)

முருகன் வரலாற்றை திரித்தால் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும்: சீமான் எச்சரிக்கை!
திங்கள் 6, ஜூலை 2026 11:36:45 AM (IST)

தவெக ஆட்சியை யாராலும் எதுவும் செய்ய முடியாது : தூத்துக்குடியில் அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் பேச்சு!
திங்கள் 6, ஜூலை 2026 10:29:47 AM (IST)

ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி: டிடிவி தினகரன் விமர்சனம்!
ஞாயிறு 5, ஜூலை 2026 9:05:48 PM (IST)

கூட்டுறவு வங்கியில் துணிகரக் கொள்ளை முயற்சி : லாக்கரை உடைக்க முடியாதால் நகை தப்பியது
ஞாயிறு 5, ஜூலை 2026 2:28:21 PM (IST)

தூத்துக்குடி ஆலயத்தில் நிதிமுறைகேடு புகார் : சபை மக்கள் ஆர்ப்பாட்டம்- பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 2:03:21 PM (IST)


