» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோவிலில் ரூ.1.82 கோடியில் புதிய காத்திருப்புக் கூடம்: பணிகள் தீவிரம்
செவ்வாய் 14, ஜூலை 2026 7:35:12 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் சிறப்புத் தரிசனப் பாதை பக்தர்களின் வசதிக்காக ரூ. 1 கோடியே 82 லட்சம் மதிப்பில் புதிய காத்திருக்கும் கூடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திமுக ஆட்சிக்காலத்தில் 2022-இல் எச்.சி.எல். (HCL) நிறுவனம் சார்பில் ரூ. 200 கோடி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ. 100 கோடி என மொத்தம் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் தொடங்கின. இதன் கீழ் இலவச பொதுத் தரிசனப் பாதையில் வரும் பக்தர்களுக்குக் காத்திருக்கும் அறை கட்டப்பட்டுள்ளது.
ஆனால், ரூ. 100 சிறப்புத் தரிசனக் கட்டணப் பாதையில் காத்திருக்கும் கூடம் இல்லாததால், கூட்ட நெரிசல் நேரங்களில் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் நிற்கும் சூழல் நிலவுகிறது. இதைக் களைந்து பக்தர்கள் நெருக்கடியின்றிப் பகுதிப் பகுதியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக, உபயதாரர் பங்களிப்புடன் இப்புதிய காத்திருக்கும் கூடம் கட்டப்பட்டு வருகிறது.
கோயில் ராஜகோபுரம் எதிரே வசந்த மண்டபம் அருகில் இரண்டு பகுதிகளாக மொத்தம் 17 ஆயிரத்து 808 சதுர அடி பரப்பளவில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இக் கட்டுமானப் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இக்கூடம் பயன்பாட்டிற்கு வரும் போது பக்தர்கள் வெயில் மற்றும் மழையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இக் கட்டுமானப் பணிகளைக் கோவில் தக்கார் ரா. அருள்முருகன், இணை ஆணையர் ஆ. அருணாசலம், துணை ஆணையர் ந. யக்ஞ நாராயணன் ஆகியோர் நேரடியாகக் கண்காணித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை : வேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் கொடூரம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:37:01 AM (IST)

மதுரை அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: நெல்லை ஆசிரியை உள்பட 6 பேர் பலி
செவ்வாய் 14, ஜூலை 2026 7:58:55 AM (IST)

வரதட்சணை நகைகளைத் திரும்பக் கேட்ட தாய் : காவல் நிலையத்தில் புதுப்பெண் அதிரடிப் புகார்!
திங்கள் 13, ஜூலை 2026 4:58:41 PM (IST)

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்!
திங்கள் 13, ஜூலை 2026 4:02:29 PM (IST)

பனையூரை தேசிய புவி-பாரம்பரிய பூங்காவாக அறிவிக்க வேண்டும் - மத்திய அரசுக்குக் கோரிக்கை!
திங்கள் 13, ஜூலை 2026 3:49:24 PM (IST)

மகளிர் விளையாட்டு விடுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு: வீராங்கனைகளுடன் கலந்துரையாடல்!
திங்கள் 13, ஜூலை 2026 12:54:36 PM (IST)


