» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பிசிசிஐ ஒத்துழைப்பால்தான் கிரிக்கெட் வீரராக இருக்கிறேன் - நடராஜன்
வெள்ளி 26, ஜூலை 2024 3:59:45 PM (IST)
பிசிசிஐ ஒத்துழைப்பால்தான் இந்திய கிரிக்கெட் வீரராக உருவாகியிருக்கிறேன் என்று நடராஜன் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். யார்க்கர் பந்துவீச்சில் புகழ்பெற்ற நடராஜன் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருப்பூர் அணிக்காக விளையாடி வருகிறார்.இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வீரர்களிடம் ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, பிசிசிஐ எனக்கு போதுமான வாய்ப்புகளை அளிக்கிறது. காயம் காரணமாக சில போட்டிகளில் நான் பங்கேற்க முடியவில்லை. பிசிசிஐ வீரர்களிடம் எந்தவொரு ஏற்றத் தாழ்வுகளையும் பார்ப்பதில்லை; கிரிக்கெட் வாரியத்தின் ஒத்துழைப்பால்தான் இந்திய கிரிக்கெட் வீரராக உருவாகியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரோகித், விராட் சிறப்பான ஆட்டம்: ஆஸி.யை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி
சனி 25, அக்டோபர் 2025 5:08:12 PM (IST)

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் : பாகிஸ்தான் அணி விலகல்!
வெள்ளி 24, அக்டோபர் 2025 4:09:52 PM (IST)

ஆஸி சென்றடைந்த இந்திய டி20 அணி வீரர்கள்!
வெள்ளி 24, அக்டோபர் 2025 3:30:19 PM (IST)

மகளிர் உலகக் கோப்பை: நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது இந்தியா!
வெள்ளி 24, அக்டோபர் 2025 11:06:44 AM (IST)

17 ஆண்டுகளுக்கு பிறகு அடிலெய்டில் இந்தியா தோல்வி: தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:27:10 PM (IST)

நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு!
வியாழன் 23, அக்டோபர் 2025 12:29:04 PM (IST)




