» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பெர்த் மைதானத்தில் புதிய சாதனை: ஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்தியா!
வெள்ளி 22, நவம்பர் 2024 3:46:32 PM (IST)

பெர்த் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். வேகத்துக்கு சாதகமான இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
முதல் இன்னிங்சில் 49.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தியா 150 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கேப்டன் பும்ரா பதிலடி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கவாஜா 8 ரன்களிலும், நாதன் மெக்ஸ்வீனி 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் சுமித்தை கோல்டன் டக் ஆகி வெளியேற்றினார்.
அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஹர்ஷித் ராணா, டிராவிஸ் ஹெட்டை கிளீன் போல்டாக்கினார். சிராஜ் தனது பங்குக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் லாபுசாக்னே விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதில் மார்னஸ் 52 பந்துகளை சந்தித்து வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் இதுவரை யாரும் 20 ரன்களை கூட தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாளில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களுடன் தடுமாறி வருகிறது. அலெக்ஸ் கேரி 19 ரன்களுடனும், ஸ்டார்க் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். ஆஸ்திரேலியா இன்னும் 83 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
72 ஆண்டுகளுக்குப் பிறகு...
பெர்த் மைதானத்தில் முதல் நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும், இந்திய அணி 7 விக்கெட்டுகளையும் இன்று (நவம்பர் 22) ஒரே நாளில் கைப்பற்றியது. இந்த 17 விக்கெட்டுகளையும் வேகப் பந்துவீச்சாளர்களே கைப்பற்றியுள்ளனர். இதற்கு முன்னதாக, பெர்த் மைதானத்தில் முதல் நாளில் அதிக விக்கெட்டுகள் 1952 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:27:50 PM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 10, டிசம்பர் 2025 8:44:24 AM (IST)

சையத் முஷ்டாக் அலி கோப்பை: சாய் சுதர்சன் அதிரடி சதம்: தமிழக அணி ஆறுதல் வெற்றி!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:35:16 PM (IST)

ஜெய்ஸ்வால் அபார சதம் : தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:02:16 AM (IST)

ருதுராஜ், கோலி சதம் வீண் : 359 ரன்களை வெற்றிகரமாக விரட்டிய தென் ஆப்பிரிக்கா!
வியாழன் 4, டிசம்பர் 2025 10:47:32 AM (IST)


