» சினிமா » செய்திகள்
தூத்துக்குடி மீனவ கிராமத்தின் கதை கிங்ஸ்டன் : ஜி.வி.பிரகாஷ்
செவ்வாய் 4, மார்ச் 2025 4:33:53 PM (IST)

"தூத்துக்குடியில் உள்ள மீனவ கிராமத்தின் வலிகளை கொண்டு உருவாக்கப்பட்ட படம் கிங்ஸ்டன்" என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.
கிங்ஸ்டன் படத்தின் கதாநாயகனும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கோவை புரோசோன் மாலில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது: "தூத்துக்குடியில் உள்ள மீனவ கிராமத்தின் வலிகளை கொண்டு உருவாக்கப்பட்ட படம். இந்திய சினிமாவில் பார்க்காத விஷயம் இந்த படத்தில் அமைந்துள்ளது. மார்ச் 7-ம் தேதி வெளியாக இருக்கும் கிங்ஸ்டன் திரைப்படம் ஒரு திகில் சாகச படம்.
இதுவரைக்கும் கடலுக்குள் யாரும் படம் எடுத்ததில்லை. கடலுக்கு அடியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் பிரம்மாண்டமாக இருக்கும். இந்திய சினிமாவில் இது ஒரு புது அனுபவமாக இருக்கும். ஒரு மீனவ கிராமத்தால் மீன் பிடிக்க உள்ளே போக முடியாது. அதன் வலிகளை கொண்டு உருவாக்கப்பட்ட கதையாக இந்தப் படம் உள்ளது.
ஹாலிவுட் திரைப்படத்தில் கடல் கொள்ளையர்கள் பற்றி எடுப்பார்கள், ஆனால் இந்த படம் தூத்துக்குடி பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு கிராமத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி எடுத்துள்ளோம். இது காதல், காமெடி, பேய் படம் கிடையாது. இதில் எல்லாமே புதுமையாக இருக்கும். இந்தக் கதை நான்காம் பாகம் வரை உள்ளது. பெரிய கதையாக இருக்கிறது. இந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களில் சார்ந்தவர்களை கொண்டு படத்தின் பெயர் அமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)

கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை!
வியாழன் 26, ஜூன் 2025 5:44:50 PM (IST)
