» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு கேள்விக்குறி; விவாதிக்க கார்கே வலியுறுத்தல்!

திங்கள் 9, மார்ச் 2026 5:14:50 PM (IST)

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் கூட்டுத் தாக்குதலும், அதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களும் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த மோதலால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கவலை தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை வளைகுடா நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. தற்போதைய சூழலில் விநியோகச் சங்கிலி அறுந்துள்ளதால், உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இதன் நேரடிப் பாதிப்பாக, இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்விற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் குறுகிய நேர விவாதம் நடத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.

இந்த மோதல் இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நேரடியாகப் பாதித்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பலர் மாயமாகியுள்ளதாகவும், சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அதிர்ச்சியளிக்கும் செய்திகள் வருகின்றன.

வளைகுடா நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 51 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நியச் செலாவணி இந்தியாவிற்கு வருகிறது. போர் நீடித்தால் இது முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.

இந்த இக்கட்டான சூழலில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மத்திய கிழக்கு நாடுகளின் மோதல் குறித்தும், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் தாமாகவே முன்வந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.


மக்கள் கருத்து

srinivasanMar 9, 2026 - 05:46:54 PM | Posted IP 162.1*****

Great BJp GOVT .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory