» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பேரூராட்சிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தென்காசி ஆட்சியர்
புதன் 25, ஆகஸ்ட் 2021 5:04:06 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளில் (திருவேங்கடம் பேரூராட்சி நீங்கலாக) வீட்டு குடிநீர் இணைப்புகள் பெறுவதற்கு பொதுமக்கள் விண்ணப்பப் படிவத்தை tenkasi.nic.in/forms/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பேரூராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
புதிதாக வீட்டு குடிநீர் இணைப்பு பெற விரும்பும் நபர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்ப பதிவுக் கட்டணம், பேரூராட்சி மூலம் நிர்ணயம் செய்யப்பட்ட வைப்புத் தொகை மற்றும் சென்டேஜ் கட்டணத்தை வங்கி வரைவோலை மூலம் செலுத்தி வீட்டு குடிநீ;ர் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்க விழா: சபாநாயகர் மு.அப்பாவு பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 12:51:08 PM (IST)

எல்.ஐ.சி. ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 14, ஜூலை 2025 8:46:24 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)
