» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாட்ஸ்அப்பில் உறவினர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டு விவசாயி தற்கொலை
திங்கள் 6, பிப்ரவரி 2023 5:16:18 PM (IST)
திசையன்விளை அருகே மனைவி மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக தகவல் அனுப்பிவிட்டு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரியை சேர்ந்தவர் சிவக்குமார்(46). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் தோட்டத்தில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுதொடர்பாக உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சமீபகாலமாக அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தற்கொலை செய்ய முடிவு செய்து, தான் விஷம் குடிக்கும் தகவலை தனது உறவினர்கள், பெற்றோர், மனைவி உள்ளிட்டோருக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி உள்ளார் என்ற விபரம் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)
