» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசியில் அவசரகால கட்டுப்பாட்டு அறை: ஆட்சியர் தகவல்
திங்கள் 4, டிசம்பர் 2023 10:06:53 AM (IST)
தென்காசியில் அவசரகால கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் தொலைபேசி எண்கள் செயல்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது : தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரகால கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி எண்களும் செயல்பட்டு வருகிறது.
கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077மற்றும் 04633 290 548 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம் புகார்களை சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.