» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை டவுனில் வாலிபர் வெட்டி கொலை: மேலும் இருவா் கைது
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:12:30 PM (IST)
நெல்லை டவுனில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காவல்பிறை தெருவைச் சோ்ந்த சங்கா் என்ற கண்ணன்(39), கடந்த 1ஆம் தேதி மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, நகரம் வையாபுரி தெருவை சோ்ந்த சீனிமாரியப்பன்(31), சிவந்திப்பட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து(27) ஆகியோரை கைது செய்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடையதாக சுத்தமல்லி பாரதிநகரை சோ்ந்த செண்பராஜ்(35) , நரசிங்கநல்லூரை சோ்ந்த சபரிஷ்(28) ஆகியோரை போலீஸாா் நேற்று கைது செய்தனா்.