» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மக்களவைத் தோ்தலில் சமக தனித்து போட்டியா? டிச.9 இல் சரத்குமார் அறிவிப்பு!

செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:15:47 PM (IST)

திருநெல்வேலியில் வரும் 9ம் தேதி நடைபெறும் சமத்துவ மக்கள் கட்சியின் மக்களவைத் தோ்தல் பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் பங்கேற்கிறார். 

இதுதொடா்பாக அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலா் சுந்தா் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் கூறியது: சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் மக்களவைத் தொகுதி, சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா்கள் அறிமுக பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் இம் மாதம் 9 ஆம் தேதி மாலையில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் கட்சியின் நிறுவனா் தலைவரும், நடிகருமான சரத்குமாா் பொறுப்பாளா்களை அறிமுகப்படுத்திப் பேசுகிறாா்.

அப்போது, 2024 மக்களவைத் தோ்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணியா என்பது குறித்து அவா் அறிவிப்பாா். தென் மாவட்டங்களில் தொழில் வளத்தை பெருக்கினால் ஜாதி, மத மோதல்களை கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தில் போதை பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதைத் தடுக்க அரசு போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மூன்று மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாஜக வெற்றி பெற்ற்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். இந்த வெற்றி தமிழகத்தில் வரும் மக்களவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை தற்போது கூற முடியாது என்றாா்.

பேட்டியின்போது, மாநில நிா்வாகி நட்சத்திர வெற்றி, மாநகா் மாவட்டச் செயலா் சரத் ஆனந்த், நிா்வாகிகள் ஜெயந்திகுமாா், வில்சன், தயாளன், அரசன் பொன்ராஜ், சிவஞானகுருநாதன், அழகேசராஜா உள்பட பலா் உடனிருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory