» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆக்ஸ்போர்டு பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா: மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு!

புதன் 6, டிசம்பர் 2023 12:23:12 PM (IST)



தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளிலும் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழாவை ஒரு வாரம் கொண்டாட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன்படி தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

விழாவிற்கு ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகியும், முதல்வரும், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார்.

என் மனம் கவர்ந்த பாரதியாரின் கவிதைகள், விடுதலை போராட்டத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய மகாகவி பாராதியாரின் கவிதைகள் என்ற தலைப்புகளில் மாணவ, மாணவிகள் பாரதியாரின் கவிதைகளை வரிசைப்படுத்தி பேசினர். மாணவ, மாணவிகள் பல்வேறு காய்கனிகள், பழங்கள் போன்ற வேடம் அணிந்து வந்திருந்தனர். 

மேலும் காய்கறி, பழங்கள் மற்றும் நவதானியங்களின் கண்காட்சி நடைபெற்றது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory