» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாநகராட்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மேயர் அறிவுறுத்தல்!

வியாழன் 7, டிசம்பர் 2023 4:26:27 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடிப்பது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. 

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவிக்கையில்: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தன. மேலும் மாநகராட்சியின் பல பகுதிகளில் உள்ள இடங்கள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கிடந்தன.  இதையெல்லாம் நாங்கள் பொறுப்பேற்ற பிறகு, எங்களோடு கவுன்சிலர்கள் இணைந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை இனங்கண்டு, அவற்றை கையகப்படுத்தி, சில இடங்களில் மாநகராட்சி பூங்கா அமைத்துள்ளோம். இதனால் மாநகர மக்களுக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. 

பூங்காக்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான உடல்நலத்தை பேண முடிகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான 60 வார்டு பகுதிகளிலும் அசூர வேகத்தில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து பகுதிகளிலும் எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். ஒரு சில இடங்கள் தாழ்வாக இருப்பதால் அதனை வருங்காலங்களில் திட்டமிட்டு மழைநீர் தேங்காத வகையில் கட்டமைப்பை உருவாக்கி பணிசெய்வோம். மடத்தூர் சாலை முதல் திரேஸ்புரம் வரை பக்கிள் ஓடையின் இருபுறமும் இரவு நேரங்களில் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல 798 புதிய மின்விளக்குகள் அமைக்கப்படுகின்றன. 

மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் தூசு இல்லாமல் அனைத்து பகுதிகளும் தூய்மையாக இருப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழா, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா போன்ற நிகழ்ச்சி மூலம் இதுவரை சுமார் 2½ லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நெகிலி கழிவுகளை தவிர்க்கும் பொருட்டு, தனியார் பங்களிப்புடன் மஞ்சள் பை திட்டத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சுமார் 2 லட்சம் மஞ்சள் பைகள் வழங்கியுள்ளோம். 

மேற்கண்ட இரண்டையும் முறையாக அனைவரும் பின்பற்றினால் எல்லோருமே நலமாக வாழலாம். தூத்துக்குடி மாநகராட்சியை சுற்றிலும் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளதால், வீடுதோறும் மரம் வளர்ப்பது அத்தியாவசிய அவசியமாய் உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கினால் தூத்துக்குடி மாநகராட்சி முதன்மை நிலைக்கு வரும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், துணை ஆணையர் ராஜாராம், செயற்பொறியாளர் பாஸ்கர், பொறியாளர் சரவணன், உதவி ஆணையர்கள் தனசிங், சேகர், உதவி செயற்பொறியாளர்கள் பிரின்ஸ் ராஜேந்திரன், கல்யாண சுந்தரம், இளநிலை பொறியாளர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

MANIDec 7, 2023 - 08:04:04 PM | Posted IP 172.7*****

குடிநீர் மிகவும் கலங்களாக வருகிறது. குளோரின் சேர்க்கப்படவில்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory