» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் பார்வையிட்டனர்!
வியாழன் 7, டிசம்பர் 2023 5:48:00 PM (IST)

ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை நாகர்கோவில் திருசிலுவை கல்லூரி மாணவிகள் பார்வையிட்டனர்.
நாகர்கோவில் திருசிலுவை கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு வரலாற்று துறை மாணவிகள் கடந்த 21 நாள்களாக நெல்லை அருங்காட்சியகத்தில் நடந்த உள் விளக்கப் பயிற்சியில் கலந்துகொண்டனர். இந்த பயிற்சியில் அருங்காட்சியகம் குறித்தும், அதன் வகைப்பாடுகள், செயல்முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு நாளையொட்டி அவர்கள் கிருஷ்ணாபுரம் கலை சிற்பங்கள், ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இதற்காக நெல்லை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி தலைமையில் பயணம் செய்தனர். கிருஷ்ணாபுரத்தில் உள்ள சிற்பங்களை மாணவிகள் பார்வையிட்டனர். அவர்கள் குறவன் இளவரசியை தூக்கி செல்லும் சிற்பம், குறத்தில் இளவரசனை தூக்கிச்செல்லும் சிலை, கர்ணம், அர்ச்சுணன், ரதி, மன்மதன், பீமன், தர்மன், புருஷா மிருகம் உள்பட பல்வேறு சிறப்பங்கள் பார்வையிட்டனர்.
இந்த கலை சிற்பங்கள் குறித்தும் அதன் நுணுக்கங்கள் குறித்தும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் அளித்தார்.அதன் பின் அவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை பார்வையிட்டனர். அவர்களுக்கு பி சைட்டில் வைத்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கமளித்தார்.
அங்கு வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சி, முழு உடல் மனிதனின் எலும்பு கூடு, புதிதாக அமையவிருக்கும் அருங்காட்சியம் மாதிரி, உள்பட அங்கு வைத்திருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். இந்தியாவிலேயே முதன்முதலில் அமைக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை அவர் பார்வையிட்டனர்.
மேலும், அலெக்சாண்டர் இரியா 100 வருடங்களுக்கு முன்பு ஆய்வு செய்த இடம் 2023ல் ஆய்வு செய்த இடங்கள் மற்றும் தங்கம் மற்றும், இரும்பு வெண்கல பொருள்கள் எடுக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கு உள்ள கறுப்பு சிவப்பு பானையோடுகளில் வகைகளை பார்வையிட்டனர்.
மேலும் நெற்உமி, மனித பற்கள், எலும்பு கூடுகளையும், முதுமக்கள் தாழிகளையும் பார்வையிட்டனர். ஆய்வு செய்வது குறித்தும், ஆதிச்சநல்லூர் சைட் குறித்தும் ஆய்வு மாணவி திவ்யா விளக்கமளித்தார். ஆய்வு ஏற்பாடுகளை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
