» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உதயகுமாருக்கு 3 ஆண்டுகள் செல்லத்தக்க பாஸ்போர்ட் : உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 7, டிசம்பர் 2023 7:55:26 PM (IST)
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமாருக்கு 3 ஆண்டுகள் செல்லத்தக்க பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், "கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக என் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 213 வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இந்த வழக்குகளால் எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஐகோர்ட்டில் வழக்கு தொடந்தேன். அந்த வழக்கில் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்த வழக்குகளை திரும்ப பெற பரிசீலிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும் வழக்குகள் திரும்ப பெறப்படவில்லை. பின்னர், கடந்த ஆண்டு ஒரு வருடம் மட்டும் செல்லத்தக்க தற்காலிக பாஸ்போர்ட் எனக்கு வழங்கப்பட்டது. இந்த பாஸ்போர்ட் மூலம் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, வெளிநாடு செல்ல ஏற்ற வகையில், 10 வருடத்துக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்க விண்ணப்பித்து இருந்தேன். ஆனால், என் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணமாக சொல்லி, பாஸ்போர்ட் வழங்க முடியாது என மறுத்துவிட்டனர். அனைத்து குடிமக்களுக்கும் வழங்கும் பாஸ்போர்ட்டை எனக்கு மறுப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள தனி நபர் சுதந்திரத்தை பாதித்துள்ளது. எனவே, எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மனுதாரர் ஒரு சமூக ஆர்வலர். அணு உலைக்கு எதிராக போராடுபவர். எனவே, அவருக்கு 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலருக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை : முதல்கட்ட கணினி குலுக்கல் ஒதுக்கீடு பணி நிறைவு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:17:19 PM (IST)

கோடை வெயில்: நெல்லை அணைகளின் நீர்மட்டம் சரிவு – 52 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:49:57 PM (IST)

நெல்லை அருகே பெண்ணைத் தாக்கி 29 பவுன் நகை கொள்ளை - சிறுவன் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:38:01 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:00:07 AM (IST)

சிறுமியைப் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:57:05 AM (IST)

விளைச்சல் குறைவால் சின்ன வெங்காயம், தக்காளி விலை கிடுகிடு உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:48:40 AM (IST)


