» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்தவர் கைது
வியாழன் 7, டிசம்பர் 2023 9:31:36 PM (IST)
தூத்துக்குடியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறிபோலி பணி நியமன ஆணை கொடுத்து ரூபாய் 4 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ரகுபதிராஜன் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் ரூபாய் 4 லட்சம் ஆகும் என்று கூறி பாஸ்போர்ட்டில் போலியான Work permit Stamping மற்றும் Work ஆர்டர் அனுப்பி பசும்பொன் முத்துராமலிங்கத்தை நம்ப வைத்து ஏமாற்றி அவரிடமிருந்து கடந்த 21.01.2022 ம் தேதி முதல் 19.05.2023 வரை ஆகிய நாட்களில் மொத்தம் ரூபாய் 4 லட்சம் பணத்தை பெற்று கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமலும் பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சிவசுப்பு மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள், உதவி ஆய்வாளர் முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார், மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, ரகுபதிராஜனை கடந்த 05.12.2023 அன்று சிவகங்கை மாவட்டம் T.புதூர் ஆக்ஸ்போர்டு நகரில் வைத்து கைது செய்து நேற்று தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் - IV ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ரகுபதிராஜன் இதே போன்று பலரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி ரூபாய் 2 கோடி பணத்தை மோசடி செய்து ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
