» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 3:09:46 PM (IST)

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
பராசக்தி மகளிர் கல்லூரி மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சார்பில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம் குற்றாலத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர். நாகேஸ்வரி தலைமை தாங்கினார்.
இக்கருத்தரங்கில் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உறுப்பினர் எம்பவர் சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:
மொபைல் போன் பயன்பாட்டில் குறைகள் இருந்தால் பாதிக்கப்படுகின்ற வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் அந்தந்த மாவட்டங்களில் நுகர்வோர் குறைதீர் மன்றங்களை அணுகி உரிய பரிகாரம் பெற முடியும்;. நுகர்வோர் பாதுகாப்பில் ஒரு பொருள் அல்லது சேவையை பெறும் பொழுது கண்டிப்பாக ரசீது கேட்டு பெற வேண்டும். மாணவர்கள் பொருட்களை வாங்கும் போது அதன் தரம், விலை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை பார்த்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் நுகர்வோரின் நலனை பாதுகாக்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை அணுக தயங்கக் கூடாது எனத் தெரிவித்தார்.
நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் இணைப்பேராசிரியை அனிதா வரவேற்றார். பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் துணைப் பொது மேலாளர்கள் மாயா, விஜய் கிருஷ்ணா சிறப்புரை ஆற்றினர். தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய செயலாளர் ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு கருத்துரை வழங்கினர். பராசக்தி கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை ஜெய்சுதா தேவி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

முனைவர். ந. அசோகன் MA,Aug 12, 2024 - 03:52:30 PM | Posted IP 172.7*****