» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கடத்தல் வாகனத்தை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் கைது
சனி 12, ஏப்ரல் 2025 5:10:46 PM (IST)
தென்காசி அருகே கடத்தல் வாகனத்தை விடுவிப்பதற்காக ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
நெல்லை பணகுடியைச் சேர்ந்த விவசாயி மணி என்பவரது மகன் செல்வகுமார். இவர் மீது தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தில் ஆள்கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்ற செல்வ குமார், கடையம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை செல்வகுமார் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ரூ.30,000 லஞ்சம் கொடுத்தால், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை விரைந்து வெளியே எடுத்து தருவதாக இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா தெரிவித்துள்ளார்.
லஞ்சப்பணத்தை கொடுக்க விரும்பாத செல்வகுமார், தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதாவிடம் அவர் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த பால்குதா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர், இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)
