» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)
நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட மணப்பாறை மற்றும் கொளத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளங்களில் நடந்து வரும் பராமரிப்பு பணி காரணமாக அந்த பாதையில் செல்லும் ஒரு சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரையில் இருந்து தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவுக்கு புதன்கிழமை தோறும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 9,16,30-ஆம் தேதிகளில் மதுரையில் இருந்து காலை 10.40 மணிக்கு பதிலாக மதியம் 12 மணிக்கு புறப்படும்.
அதேபோல, நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரயில்கள் (வ.எண்.06029/06030) வருகிற 6-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து இயக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)
