» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்
சனி 12, ஏப்ரல் 2025 8:31:50 PM (IST)

பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் தேரோட்ட திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தளங்களில் ஒன்றான ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாளையங்கோட்டையில் உள்ள அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோத்ஸவ திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோத்ஸவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி கடந்த 3-ந்தேதி காலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் கொடியேற்றியதும் மகாதீபாராதனை நடைபெற்றது. மாலையில் தோளுக்கினியானில் ருக்மணி சத்யபாமா, ராஜகோபாலன் வீதியுலா நடைபெறுகிறது.
தொடர்ந்து 4-ந்தேதி இரவு 7 மணிக்கு யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்திலும், 5-ந்தேதி ராமர் அலங்காரத்தில் அனுமன் வாகனத்திலும், 6-ந்தேதி பரமபத நாதன் அலங்காரத்தில் ஆதிசேஷ வாகனத்திலும், 7-ந்தேதி வைகுண்டநாதன் அலங்காரத்தில் இரட்டை கருட சேவையிலும் பெருமாள் திருவீதியுலா வந்தார்.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்னதாக தேரோட்டத்தை முன்னிட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து ருக்மணி சத்தியபாமா சமேத ராஜகோபாலர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். பின்னர் தேரில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நான்கு ரத வீதிகளிலும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் கோவிந்தா கோபாலா கரகோஷம் விண்ணதிர முழங்கினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)
