» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்: மாணவ, மாணவியர்கள் முன்பதிவு செய்யலாம்!
வியாழன் 17, ஏப்ரல் 2025 3:08:01 PM (IST)
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 21 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் வருகிற 25ஆம் தேதி தொடங்க உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவின் சார்பில் 21 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் 25.04.2025 முதல் 15.05.2025 வரை அண்ணா விளையாட்டு அரங்கம் பாளையங்கோட்டையில் வைத்து நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி முகாமில் தடகளம், (Athletic), கூடைப்பந்து, (Baskeball), கையூந்துபந்து, (Volleyball), வளைகோல்பந்து (Hockey), ஜிம்னாஸ்டிக் (Gymnastics), குத்துச்சண்டை (Boxing), ஆகிய விளையாட்டுக்களுக்கு 18 வயதிற்குட்பட்ட மாணவ / மாணவியர்களுக்கு NIS தகுதி வாய்ந்த சிறந்த அரசு பயிற்றுநர்களை கொண்டு காலை மற்றும் மாலை வேலைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ / மாணவியர்கள் உடனடியாக முன்பதிவு செய்திட அண்ணா விளையாட்டரங்க அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு கூடைப்பந்து விளையாட்டிற்கு பழனி விக்னேஷ் 9486148055, வாலிபால் விளையாட்டிற்கு அருள்போஸ் 9488887989, ஹாக்கி விளையாட்டிற்கு ஹானஸ்ட் ராஜா 9994458320, ஜிம்னாஸ்டிக் விளையாட்டிற்கு ஆதவா 8428365332, தடகள விளையாட்டிற்கு மகேஷ்வரன் 9600347250, குத்துச்சண்டை விளையாட்டிற்கு ஷாம் எபினேசர் 9444464408 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)
