» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பைக் மீது லாரி மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலி : புளியங்குடியில் சோகம்!
வியாழன் 29, மே 2025 8:03:16 PM (IST)
புளியங்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி ரெங்க கருப்பன் தெருவை சேர்ந்தவர் சண்முகையா மகன் கதிரேசன் (37), இவர் ஓட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் டைப்பிஸ்டாக வேலை செய்து வருகிறார். விடுமுறையில் புளியங்குடிக்கு வந்த கதிரேசன் இன்று மாலை தனது பைக்கில் புளியங்குடி பேருந்து நிலையத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ராயகிரியில் இருந்து கொல்லம் நோக்கி வைக்கோல் லோடு ஏற்றி சென்ற லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் கதிரேசன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் மற்றும் போலீசார் இறந்த கதிரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து லாரியை ஒட்டி வந்த கொல்லத்தை சேர்ந்த சசிதரன் மகன் பிரதீப்பை (39) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் இறந்த கதிரேசனுக்கு சங்கீதா என்ற மனைவியும் ஒரு மகளும் (4) உள்ளனர். லாரி மோதி நீதிமன்ற ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
