» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காற்றாலை நிறுவனத்தில் இரும்பு பிளேட்டுகள் திருட்டு: 3 பேர் கைது
செவ்வாய் 3, ஜூன் 2025 5:25:58 PM (IST)
தெற்கு வாகைகுளத்திலுள்ள காற்றாலை நிறுவனத்தில் இரும்பு பிளேட்டுகளை திருடிய வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர், தெற்கு வாகைகுளத்திலுள்ள காத்தாடி கம்பெனியில் சூப்பர்வைசராக கயத்தாறு, உசிலங்குளம், கீழத் தெருவை சேர்ந்த கருப்பசாமி (45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 30.5.2025 அன்று காற்றாலை நிறுவனத்தில் வேலைகள் நடைபெறும் இடத்திற்கு சென்று பார்த்தபோது காற்றாலைக்கு மாற்ற வேண்டிய 15 இரும்பு கனெக்சன் பிளேட்டுகளை காணவில்லை.
இதுகுறித்து கருப்பசாமி மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அங்கு வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் விசாரணை மேற்கொண்டார். அதில் தென்காசி மாவட்டம், ஊத்துமலை, கல்லத்திகுளம், வடக்கு தெருவை சேர்ந்த மோசை(43), முத்துக்கனி(38), களக்குடியை சேர்ந்த முருகன்(54) ஆகிய 3 பேரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்து. இதனையடுத்து மேற்சொன்ன 3 பேரையும் கைது செய்த நிலையில், அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உரிய சட்ட நடவடிக்கை எடுத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
