» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு சீருடைகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!

புதன் 4, ஜூன் 2025 4:19:00 PM (IST)



பாளையங்கோட்டை குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு சீருடைகள் மற்றும் முன் பருவ கல்வி புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் முத்தூரில் உள்ள குழந்தைகள் மையத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட குழந்தைகளை வரவேற்று குழந்தைகளுக்கு சீருடைகள், முன்பருவ கல்வி புத்தகங்கள், செயல்பாடுகள் குறித்த விவர தொகுப்புகள், குழந்தைகள் ஆய்வு அட்டைகள் மற்றும் இலவச கல்வி உபகரண பொருட்களை வழங்கி புதிதாக இன்று (04.06.2025) குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் சேர்ந்துள்ள குழந்தைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், பூங்கொத்து கொடுத்து வரவேற்று தெரிவித்ததாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் 1261 குழந்தைகள் மையங்கள் உள்ளது. இதில் பாளையங்கோட்டை வட்டாரத்தில் 141 குழந்தைகள் மையங்கள் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 23,433க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. அனைத்து குழந்தைகளுக்கும் இணை உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஊட்டச்சத்துகள் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்கள் ஊட்டசத்துகளை அதிகரிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடுகள் இல்லா மாவட்டமாக உருவாக்க தொடர்ந்து சுகாதாரத்துறையும் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெனிபா, புள்ளியியல் ஆய்வாளர் சம்சுதீன், வட்டார வளர்ச்சி அலுவலர் நெல்லையப்பன், ஊராட்சி மன்றத் தலைவர் சுடலைகன்னு மற்றும் அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory