» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் ஆஜர்!
வெள்ளி 6, ஜூன் 2025 12:31:29 PM (IST)
அம்பையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பிரிவு காவல் நிலையங்களில் கடந்த 2023ல் விசாரணைக்காக வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இவ்விவகாரத்தில் அப்போதைய அம்பா சமுத்திரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங், காவல் ஆய்வாளர் ராஜ குமாரி உள்ளிட்ட 14 காவல் துறை அலுவலர்கள் மீது குற்ற முகாந்திரம் இருப்பதாக சிபிசிஐடி போலீஸாரால் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் ஆஜராகி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்டீரிங் கட் ஆனதால் வயலில் பாய்ந்த அரசு பஸ்: பெண் பலி; 10 பயணிகள் படுகாயம்
வெள்ளி 6, ஜூன் 2025 8:32:34 AM (IST)

கஞ்சா, அடிதடி, வழிப்பறி வழக்குகளில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வியாழன் 5, ஜூன் 2025 4:21:55 PM (IST)

அரசு அலுவலகங்களில் கழிவுகள் சேகரித்து மறுசுழற்சி திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
வியாழன் 5, ஜூன் 2025 3:34:46 PM (IST)

குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு சீருடைகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!
புதன் 4, ஜூன் 2025 4:19:00 PM (IST)

வீடுபுகுந்து பெண் கழுத்தை அறுத்துக் கொலை : தோல் வியாபாரி கைது
செவ்வாய் 3, ஜூன் 2025 5:47:10 PM (IST)

நெல்லையில் 1 கிலோ போதை சாக்லேட் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது!
செவ்வாய் 3, ஜூன் 2025 5:29:08 PM (IST)
