» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

சனி 14, ஜூன் 2025 9:04:09 AM (IST)



கனமழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் தென்காசி, நெல்ைல உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று இரவில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. 

இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி விழுந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளையும் மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது.

அருவிகளில் குளிக்க அனுமதிக்காததால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் அருவிக்கரைகளில் நின்று செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அருவிக்கரைகளில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். அருவிகளில் நீர்வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory