» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
சனி 14, ஜூன் 2025 9:04:09 AM (IST)

கனமழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் தென்காசி, நெல்ைல உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று இரவில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி விழுந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளையும் மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது.
அருவிகளில் குளிக்க அனுமதிக்காததால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் அருவிக்கரைகளில் நின்று செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அருவிக்கரைகளில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். அருவிகளில் நீர்வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்!
சனி 14, ஜூன் 2025 5:17:55 PM (IST)

திருநெல்வேலியில் உலக குருதி கொடையாளர் தினம்: ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 14, ஜூன் 2025 3:53:17 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சீ.சுரேஷ்குமார் ஆய்வு
வெள்ளி 13, ஜூன் 2025 5:34:11 PM (IST)

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்தார் சபாநாயகர்!
வெள்ளி 13, ஜூன் 2025 12:46:34 PM (IST)

வள்ளியூரில் 1 கிலோ பறிமுதல் : வாலிபர் கைது!
வெள்ளி 13, ஜூன் 2025 10:52:23 AM (IST)

அசைவ உணவு சாப்பிட்ட 4பேர் உயிரிழப்பு: முதியோர் இல்லத்திற்கு சீல் வைப்பு!
வெள்ளி 13, ஜூன் 2025 8:44:56 AM (IST)
