» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
சனி 14, ஜூன் 2025 9:04:09 AM (IST)

கனமழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் தென்காசி, நெல்ைல உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று இரவில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி விழுந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளையும் மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது.
அருவிகளில் குளிக்க அனுமதிக்காததால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் அருவிக்கரைகளில் நின்று செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அருவிக்கரைகளில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். அருவிகளில் நீர்வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
