» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சேரன்மகாதேவியில் போலீஸ் - பொதுமக்கள் நட்புறவு விழிப்புணர்வு கூட்டம்!
புதன் 25, ஜூன் 2025 10:25:15 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் சேரன்மகாதேவியில் போலீஸ் பொதுமக்கள் நட்புறவு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுபடி சேரன்மகாதேவி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் ஆலோசனைப்படி முன்னீர் பள்ளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையில் சுப்ரமணியபுரம் கிராமத்தில் பொதுமக்கள் காவல்துறை இடையேயான கூட்டம் நடைபெற்றது.
சுப்ரமணியபுரம் கிராம சமூக ஆர்வலர்கள் ஏ.சி. துறை மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் போலீஸ் பொதுமக்களுக்கு இடையே நட்புறவையும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் பேசினார்
பின்னர் சுப்பிரமணியபுரத்தில் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்களை 2 மாணவிகளுக்கும். பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 3 மாணவ மாணவிகளுக்கும் புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுப்பிரமணியபுரம் கிராம மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்றும்போதைப் பொருள்களுக்கு அடிமையாக மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விடுதி உணவை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் : மருத்துவமனையில் அனுமதி!
புதன் 16, ஜூலை 2025 4:38:32 PM (IST)

திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்க விழா: சபாநாயகர் மு.அப்பாவு பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 12:51:08 PM (IST)

எல்.ஐ.சி. ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 14, ஜூலை 2025 8:46:24 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)
