» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நயினார்குளம் பிரிவு கால்வாய் தூர்வாரும் பணி : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!

புதன் 25, ஜூன் 2025 4:53:15 PM (IST)



திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட நயினார்குளம் பிரிவு கால்வாயில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட நயினார்குளம் பிரிவு கால்வாயில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.15 இலட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கால்வாய் பகுதியில் 2 மீட்டர் ஆழத்திற்கு குப்பை மற்றும் கட்டட கழிவுகள் அகற்றும் பணி 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 800 மீட்டர் நீர்வளத்துறையின் மூலமும், 200 மீட்டர் எக்ஸ் நோரா தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இப்பணிகள் அனைத்து அடுத்த வாரம் இறுதிக்குள் நிறைவடையும். அகற்றப்பட்ட கழிவுகள் அனைத்தும் 4 கிலோ மீட்டருக்கு வெளியில் சென்று பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் கொட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், தாமிரபரணி வடிநில கோட்டம் செயற்பொறியாளர் கோவிந்தராசு, உதவி பொறியாளர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory