» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நயினார்குளம் பிரிவு கால்வாய் தூர்வாரும் பணி : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!
புதன் 25, ஜூன் 2025 4:53:15 PM (IST)

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட நயினார்குளம் பிரிவு கால்வாயில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட நயினார்குளம் பிரிவு கால்வாயில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.15 இலட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கால்வாய் பகுதியில் 2 மீட்டர் ஆழத்திற்கு குப்பை மற்றும் கட்டட கழிவுகள் அகற்றும் பணி 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 800 மீட்டர் நீர்வளத்துறையின் மூலமும், 200 மீட்டர் எக்ஸ் நோரா தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் அனைத்து அடுத்த வாரம் இறுதிக்குள் நிறைவடையும். அகற்றப்பட்ட கழிவுகள் அனைத்தும் 4 கிலோ மீட்டருக்கு வெளியில் சென்று பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் கொட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், தாமிரபரணி வடிநில கோட்டம் செயற்பொறியாளர் கோவிந்தராசு, உதவி பொறியாளர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சுப்போட்டிகள் : பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்!
புதன் 25, ஜூன் 2025 5:41:53 PM (IST)

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகிறது மாஞ்சோலை: மத்தியக் குழுவினர் ஆய்வு!
புதன் 25, ஜூன் 2025 4:21:37 PM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா 30ம் தேதி தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்!
புதன் 25, ஜூன் 2025 12:06:46 PM (IST)

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
புதன் 25, ஜூன் 2025 11:06:12 AM (IST)

சேரன்மகாதேவியில் போலீஸ் - பொதுமக்கள் நட்புறவு விழிப்புணர்வு கூட்டம்!
புதன் 25, ஜூன் 2025 10:25:15 AM (IST)

மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் : கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு அழைப்பு!
செவ்வாய் 24, ஜூன் 2025 4:13:05 PM (IST)
