» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நயினார்குளம் பிரிவு கால்வாய் தூர்வாரும் பணி : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!
புதன் 25, ஜூன் 2025 4:53:15 PM (IST)

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட நயினார்குளம் பிரிவு கால்வாயில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட நயினார்குளம் பிரிவு கால்வாயில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.15 இலட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கால்வாய் பகுதியில் 2 மீட்டர் ஆழத்திற்கு குப்பை மற்றும் கட்டட கழிவுகள் அகற்றும் பணி 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 800 மீட்டர் நீர்வளத்துறையின் மூலமும், 200 மீட்டர் எக்ஸ் நோரா தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் அனைத்து அடுத்த வாரம் இறுதிக்குள் நிறைவடையும். அகற்றப்பட்ட கழிவுகள் அனைத்தும் 4 கிலோ மீட்டருக்கு வெளியில் சென்று பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் கொட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், தாமிரபரணி வடிநில கோட்டம் செயற்பொறியாளர் கோவிந்தராசு, உதவி பொறியாளர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)
