» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாட்டு வெடிகுண்டை கடித்த பசுமாட்டின் வாய் சிதறியது: போலீசார் தீவிர விசாரணை
செவ்வாய் 22, ஜூலை 2025 8:20:20 AM (IST)
கடையநல்லூரில் நாட்டு வெடிகுண்டை உணவு என கடித்த பசுமாட்டின் வாய் சிதறியது. குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்த மர்மநபர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் திரிகூடபுரம் பசும்பொன் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் வீட்டில் வளர்க்கும் பசுமாடு ஒன்று அந்த பகுதியில் மேய்ந்துகொண்டிருந்தது. அப்போது தரையில் இருந்த நாட்டு வெடிகுண்டை உணவு என மாடு கடித்துள்ளது. இதனால் திடீரென அந்த குண்டு வெடித்ததால் பசுமாட்டின் வாய்ப்பகுதி சிதறி துடித்தது.
இதுகுறித்து தகவலறிந்த சொக்கம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உடையார் சாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், யாரோ காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக குடியிருப்பு பகுதி அருகில் நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்திருக்கலாம் என்றும், அதை மாடு கடித்ததால் வெடித்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் துறை அலுவலர் ஆனந்தி, வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் விரைந்து வந்தனர். மற்ற பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்று தேடினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. இதன் முடிவில் அங்கிருந்த மேலும் 3 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் செயல் இழக்க செய்தனர். குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் கிடந்த நிலையில், அதனை குழந்தைகளோ, பெரியவர்களோ தவறுதலாக எடுத்தபோது வெடித்தால் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்த மர்மநபர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)
