» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி அருகே கணவர் அடித்து கொலை: மனைவி, மகன் உட்பட 3 பேர் கைது
வெள்ளி 25, ஜூலை 2025 4:58:22 PM (IST)
திருநெல்வேலி அருகே கணவரை அடித்து கொலை செய்த மனைவி, மகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி, தளபதிசமுத்திரத்தைச் சேர்ந்த சுவிகரன் (50) என்பவர் குடிபோதையில் தனது மனைவி லதா(48), மகன் சுமன்(20) ஆகியோருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டில் பிரச்சினை செய்த சுவிகரன் தனது மனைவி லதாவை தாக்கியுள்ளார்.
இதையடுத்து ஏற்பட்ட தகராறின்போது லதா, அவரது மகன் சுமன் மற்றும் லதாவின் உடன்பிறந்த சகோதரி சுபா(40) ஆகியோர் சேர்ந்து சுவிகரனை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா தலைமையில், ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவத்தில் குற்றவாளிகள் 3 பேரையும் விரைவாக கைது செய்ததற்கு, டி.எஸ்.பி. தர்ஷிகா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரத் மற்றும் காவல் துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




