» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் 30 சவரன் நகை திருட்டு: காவலர் உட்பட 2 பேர் கைது!
வெள்ளி 25, ஜூலை 2025 5:03:41 PM (IST)
நெல்லை மாநகர ஆயுதப்படை காவல் குடியிருப்பில் உள்ள வீட்டில் 30 சவரன் தங்க நகைகளை திருடிய வழக்கில் காவலர் உட்பட 2பேர் கைது செய்யப்பட்டுள்னர்.
திருநெல்வேலி, பெருமாள்புரம் ஆயுதப்படை காவல் குடியிருப்பிலுள்ள வீட்டில் கடந்த 16ம் தேதி முன்பக்க கதவினை திறந்து வீட்டில் இருந்த அலமாரியை உடைத்து அதிலிருந்த சுமார் 30 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போலீஸ் விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலி மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முகமதுஅசாருதீன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து திருடுபோன நகைகளை மீட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




