» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காரையாறு பகுதிகளை வனத்துறை அமைச்சர் ஆய்வு : சொரிமுத்து அய்யனார் கோவிலில் தரிசனம்!
சனி 26, ஜூலை 2025 5:18:21 PM (IST)

காரையாறு வனப்பகுதி மற்றும் சேர்வலாறு அணை பகுதிகளை வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணை பகுதியில் மேம்பாட்டு பணிகள் குறித்து நேற்றையதினம் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்றையதினம், காரையாறு, சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து வெளியேற்றம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, நீர்வரத்து சேமிப்பது, விவசாய பாசனத்திற்கு தகுந்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து துறைசார்ந்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், காரையார் - மணிமுத்தாறு அணையை இணைப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து காரையாறு பகுதிகளில் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, சுவாமி தரிசனம் மேற்கொண்டார். ஆய்வில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் மு.இளையராஜா, முன்னாள் சட்டமன்ற பேரவைத்தலைவர் இரா.ஆவுடையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)
