» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காரையாறு பகுதிகளை வனத்துறை அமைச்சர் ஆய்வு : சொரிமுத்து அய்யனார் கோவிலில் தரிசனம்!
சனி 26, ஜூலை 2025 5:18:21 PM (IST)

காரையாறு வனப்பகுதி மற்றும் சேர்வலாறு அணை பகுதிகளை வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணை பகுதியில் மேம்பாட்டு பணிகள் குறித்து நேற்றையதினம் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்றையதினம், காரையாறு, சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து வெளியேற்றம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, நீர்வரத்து சேமிப்பது, விவசாய பாசனத்திற்கு தகுந்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து துறைசார்ந்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், காரையார் - மணிமுத்தாறு அணையை இணைப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து காரையாறு பகுதிகளில் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, சுவாமி தரிசனம் மேற்கொண்டார். ஆய்வில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் மு.இளையராஜா, முன்னாள் சட்டமன்ற பேரவைத்தலைவர் இரா.ஆவுடையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




