» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மனு அளித்த பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கல்!
திங்கள் 28, ஜூலை 2025 12:32:36 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் கோரிக்கை மனுக்கள் அளித்த பயனாளிகளுக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.07.2025) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
இக்கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவுகள் கணக்கெடுப்பு பணி சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் (CSPs) மூலம் முன்களப் பணியாளர்களால் மேற்கொள்வதற்காக தலா ரூ.17 ஆயிரம் மதிப்பில் 180 களப்பணியாளர்களுக்கு கையடக்க கணினிகளை மாவட்ட வழங்கினார்.
அவர் தொடர்ந்து, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் கோரிக்கை மனுக்கள் அளித்துள்ள 4 பயனாளிகளுக்கு தலா ரூ.5018/- மதிப்பிலான தேய்ப்பு பெட்டிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ.1.05 இலட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர நாற்காலி ஒரு பயனாளிக்கு, ரூ.6500/- மதிப்பிலான மூன்று சக்கர நாற்காலி ஒரு பயனாளிக்கும் வழங்கினார். இந்நிகழ்வில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சிவசங்கரன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)
