» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இரு தரப்பினர் இடையே மோதல்: போலீசார் குவிப்பு; துப்பாக்கி சூடு - நெல்லையில் பரபரப்பு!
செவ்வாய் 29, ஜூலை 2025 10:38:20 AM (IST)
நெல்லையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் காயமடைந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாப்பாகுடியில் நேற்று நள்ளிரவு இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்றனர். மேலும், மோதலை தடுக்க முற்பட்டனர். அப்போது, போலீசாரை இளைஞர் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனால், தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் இளைஞர் காயமடைந்துள்ளார். இதையடுத்து, பாப்பாகுடி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், போலீசார் சுட்டதில் காயமடைந்த நபர் நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)
