» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இரு தரப்பினர் இடையே மோதல்: போலீசார் குவிப்பு; துப்பாக்கி சூடு - நெல்லையில் பரபரப்பு!
செவ்வாய் 29, ஜூலை 2025 10:38:20 AM (IST)
நெல்லையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் காயமடைந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாப்பாகுடியில் நேற்று நள்ளிரவு இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்றனர். மேலும், மோதலை தடுக்க முற்பட்டனர். அப்போது, போலீசாரை இளைஞர் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனால், தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் இளைஞர் காயமடைந்துள்ளார். இதையடுத்து, பாப்பாகுடி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், போலீசார் சுட்டதில் காயமடைந்த நபர் நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




