» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இரு தரப்பினர் இடையே மோதல்: போலீசார் குவிப்பு; துப்பாக்கி சூடு - நெல்லையில் பரபரப்பு!

செவ்வாய் 29, ஜூலை 2025 10:38:20 AM (IST)

நெல்லையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் காயமடைந்துள்ளார். 

நெல்லை மாவட்டம் பாப்பாகுடியில் நேற்று நள்ளிரவு இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்றனர். மேலும், மோதலை தடுக்க முற்பட்டனர். அப்போது, போலீசாரை இளைஞர் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனால், தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். 

இந்த துப்பாக்கி சூட்டில் இளைஞர் காயமடைந்துள்ளார். இதையடுத்து, பாப்பாகுடி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், போலீசார் சுட்டதில் காயமடைந்த நபர் நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory