» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே 400 போதை மாத்திரைககள் பறிமுதல் : வாலிபர் கைது
செவ்வாய் 29, ஜூலை 2025 12:11:44 PM (IST)
நெல்லை அருகே போதை மாத்திரைககள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 400 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி பகுதியில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசனார்குளம் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த அம்பலம், மேற்கு தெருவை சேர்ந்த ஜோசப் (21) என்பவரை போலீசார் சோதனை செய்து பார்த்தனர்.
அப்போது அவர் மனித உடலுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்கக்கூடிய 400 போதை மாத்திரைகளை திருப்பூரில் இருந்து வாங்கி நெல்லைக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஜோசப்பை நேற்று கைது செய்து, அவரிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆணவ படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் அவசியம்: ஆணையத் தலைவர் ச.தமிழ்வாணன்
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 5:11:09 PM (IST)

கவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு: அமைச்சர் கே.என்.நேரு மரியாதை!
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 11:30:11 AM (IST)

நெல்லையில் ரூ.2.53 கோடி நலத்திட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வெ.ஆறுச்சாமி வழங்கினார்
வியாழன் 31, ஜூலை 2025 4:57:47 PM (IST)

முன்விரோதத்தில் வாலிபரை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
வியாழன் 31, ஜூலை 2025 8:56:56 AM (IST)

பழைய குற்றாலம் அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் 2பேர் உயிரிழப்பு!
புதன் 30, ஜூலை 2025 5:36:49 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலைப் பணிகள்: மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆய்வு
புதன் 30, ஜூலை 2025 4:53:00 PM (IST)
