» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கரகாட்ட நிகழ்ச்சியில் தகராறு - 3பேர் காயம் : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!
செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 12:02:48 PM (IST)
களக்காடு அருகே கரகாட்ட நிகழ்ச்சியில் தகராறு செய்து 3பேரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வலேி மாவட்டம், களக்காடு அருகே உள்ள பத்மநேரி கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஒரு திருவிழாவின்போது, வெளியூரிலிருந்து வந்த நபர் ஒருவர், கரகாட்ட நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது விரும்பத்தகாத செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து உள்ளூர் நபர்கள் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத 2 பேர் பத்மநேரி கிராமத்திற்கு வந்து, திருவிழா முடிந்து ஓய்வில் இருந்த ஊர் நபர்களை தாக்கியுள்ளனர். இதில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரகாட்ட நிகழ்ச்சியின் போது நடந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)





மந்திரமணிAug 8, 2025 - 09:31:29 AM | Posted IP 172.7*****