» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீ விபத்து
புதன் 6, ஆகஸ்ட் 2025 5:17:05 PM (IST)
புனலூர்- செங்கோட்டை இடையே குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கேரள மாநிலம், குருவாயூரிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் புனலூர்- செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே மலைப்பகுதி என்பதால் இரட்டை இன்ஜின்களை பொருத்துவதற்கான பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ரயில் இன்ஜினில் திடீரென தீப்பற்றி உள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக தீ அணைப்பான்களை பயன்படுத்தி தீயை அணைத்தனர். மேலும், தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
சனி 9, ஆகஸ்ட் 2025 4:16:16 PM (IST)

நீர்நிலைகளில் மண் அள்ள முழுமையாக தடை விதிக்க வேண்டும்: சமூக ஆர்வலர் கோரிக்கை!
சனி 9, ஆகஸ்ட் 2025 12:44:21 PM (IST)

ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை மாணவர்கள் பார்க்க வேண்டும் : முத்தாலங்குறிச்சி காமராசு
சனி 9, ஆகஸ்ட் 2025 12:26:01 PM (IST)

நெல்லையில் திருட்டு வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 12:02:33 PM (IST)

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 8:52:50 AM (IST)

திருநெல்வேலியில் 23ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 4:20:21 PM (IST)
