» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் திருட்டு வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 12:02:33 PM (IST)
திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் கைதான வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை., மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் திருட்டு மற்றும் நகை பறித்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரம், சுடலை கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் ஆறுமுககனி (20) என்பவர் ஈடுபட்டு வந்தார்.
அவர் மீது திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், ஜங்ஷன் சரகம் காவல் உதவி கமிஷனர் (பொறுப்பு) நிக்சன், திருநெல்வேலி சந்திப்பு (குற்றம்) போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரப்படி நேற்று (7.8.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 8:52:50 AM (IST)

திருநெல்வேலியில் 23ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 4:20:21 PM (IST)

கவின் கொலை வழக்கு: சிபிசிஐடி காவலுக்கு சுர்ஜித், தந்தை சரவணன் தரப்பு எதிர்ப்பு
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 3:48:06 PM (IST)

தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி விற்பனை : ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்!
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 12:14:37 PM (IST)

மின் ஊழியரை தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 11:22:29 AM (IST)

பள்ளி மாணவர் உடலை பெற்றுக்கொள்ள மறுப்பு: நீதிமன்ற உத்தரவின்பேரில் தகனம்!
புதன் 6, ஆகஸ்ட் 2025 8:40:26 PM (IST)
