» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை மாணவர்கள் பார்க்க வேண்டும் : முத்தாலங்குறிச்சி காமராசு
சனி 9, ஆகஸ்ட் 2025 12:26:01 PM (IST)

ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை தமிழ் மாணவர்கள் ஒவ்வொருவரும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார்.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி தன்னாட்சி கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் நடந்த தமிழ் மன்ற கருத்தரங்கம் இலயோலா அரங்கத்தில் நடந்தது. இணை முதல்வர் அ .லூர்து சாமி தலைமை வகித்தார். தமிழ்மன்றப் பொறுப்பாசிரியர் ஜெனிபா மேரி, துறை ஒருங்கிணைப்பாளர் மா. பாலசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு "தமிழர் வரலாற்றில் ஆதிச்சநல்லூர்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கி பேசும்போது ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ள இந்தியாவிலேயே முதல் சைட் மியூசியத்தினை தமிழ் மாணவர்கள் ஒவ்வொருவரும் நேரில் சென்று பார்க்க வேண்டும். உங்கள் கல்லூரியை சுற்றியே பல அபூர்வ தகவல்கள் கல்வெட்டுகளாக புதைந்து கிடக்கிறது.
குறிப்பாக பாளையங்கோட்டை பஸ் நிலையத்தினை சுற்றி பல கல்வெட்டுகள் உள்ளன. அதையெல்லாம் தாங்கள் படித்து பார்த்தால் நடந்த பல வரலாறுகள் நமக்கு புலப்படும் என பேசினார். நிகழ்ச்சியை தொகுத்து மாணவி சி.த.இஷா தொகுத்து வழங்கினார், மாணவி சபிகா வரவேற்றார். மாணவி ஜீவன்ஸ்ரீ நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
சனி 9, ஆகஸ்ட் 2025 4:16:16 PM (IST)

நீர்நிலைகளில் மண் அள்ள முழுமையாக தடை விதிக்க வேண்டும்: சமூக ஆர்வலர் கோரிக்கை!
சனி 9, ஆகஸ்ட் 2025 12:44:21 PM (IST)

நெல்லையில் திருட்டு வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 12:02:33 PM (IST)

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 8:52:50 AM (IST)

திருநெல்வேலியில் 23ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 4:20:21 PM (IST)

கவின் கொலை வழக்கு: சிபிசிஐடி காவலுக்கு சுர்ஜித், தந்தை சரவணன் தரப்பு எதிர்ப்பு
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 3:48:06 PM (IST)
