» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை மாணவர்கள் பார்க்க வேண்டும் : முத்தாலங்குறிச்சி காமராசு
சனி 9, ஆகஸ்ட் 2025 12:26:01 PM (IST)

ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை தமிழ் மாணவர்கள் ஒவ்வொருவரும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார்.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி தன்னாட்சி கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் நடந்த தமிழ் மன்ற கருத்தரங்கம் இலயோலா அரங்கத்தில் நடந்தது. இணை முதல்வர் அ .லூர்து சாமி தலைமை வகித்தார். தமிழ்மன்றப் பொறுப்பாசிரியர் ஜெனிபா மேரி, துறை ஒருங்கிணைப்பாளர் மா. பாலசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு "தமிழர் வரலாற்றில் ஆதிச்சநல்லூர்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கி பேசும்போது ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ள இந்தியாவிலேயே முதல் சைட் மியூசியத்தினை தமிழ் மாணவர்கள் ஒவ்வொருவரும் நேரில் சென்று பார்க்க வேண்டும். உங்கள் கல்லூரியை சுற்றியே பல அபூர்வ தகவல்கள் கல்வெட்டுகளாக புதைந்து கிடக்கிறது.
குறிப்பாக பாளையங்கோட்டை பஸ் நிலையத்தினை சுற்றி பல கல்வெட்டுகள் உள்ளன. அதையெல்லாம் தாங்கள் படித்து பார்த்தால் நடந்த பல வரலாறுகள் நமக்கு புலப்படும் என பேசினார். நிகழ்ச்சியை தொகுத்து மாணவி சி.த.இஷா தொகுத்து வழங்கினார், மாணவி சபிகா வரவேற்றார். மாணவி ஜீவன்ஸ்ரீ நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 25, அக்டோபர் 2025 4:18:40 PM (IST)

நெல்லையில் பெண் பயணியை அவதூறாக பேசிய அரசு பஸ் டிரைவர் பணி இடைநீக்கம்
சனி 25, அக்டோபர் 2025 8:36:18 AM (IST)

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:06:49 PM (IST)

குடும்ப பிரச்சினையில் மனைவி, மாமியாருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:30:32 AM (IST)

கல்லூரி பேராசிரியை வீட்டில் 31 பவுன் நகை திருட்டு : வேலைக்கார பெண் உள்பட 3 பேர் கைது!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:28:01 AM (IST)

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம், பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 23, அக்டோபர் 2025 4:02:33 PM (IST)




