» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நீர்நிலைகளில் மண் அள்ள முழுமையாக தடை விதிக்க வேண்டும்: சமூக ஆர்வலர் கோரிக்கை!

சனி 9, ஆகஸ்ட் 2025 12:44:21 PM (IST)



பாளையங்கோட்டை வட்டத்தில் நீர்நிலைகளில் முறைகேடாக மணல் திருடி விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பேச்சித்துரை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுபாட்டிலுள்ள நீர்நிலைகளில் வண்டல் மண் / களி மண் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக மண் எடுத்து செல்ல அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.

பாளையங்கோட்டை வட்டத்தில் விவசாயத்திற்கு இலவசமாக மண் எடுத்து செல்லும் இந்த ஆணையை பயன்படுத்தி மணல் மாஃபியாக்கல் விவசாயிகள் பெயரில் அனுமதி பெற்று பல்வேறு நீர்நிலைகளில் முறைகேடாக மண் அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். வண்டல் மண் / களி மண் அள்ள அனுமதி பெற்று செம்மண் அள்ளி வீட்டு மனைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

பாளையங்கோட்டை வட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள நொச்சிகுளம், வேட்டைக்காரன் குளம், சிவலார்குளம், பற்பகுளம், வேம்பகுளம் மற்றும் வேப்பனாங்குளம் போன்ற பல்வேறு நீர்நிலைகளில் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயத்திற்கு வண்டல் மண் எடுப்பதாக அனுமதி பெற்று செம்மண் அள்ளி மனைகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.

மேலும் அரசு விதித்த பெரும்பாலான நிபந்தனைகளை கடைபிடிக்கப்படவில்லை. மேலும் நீர்நிலைகளில் மண்ணை அதிக அளவு திருடி வெளிய விற்று வருவதால் குடியிருப்பு பகுதியில் நிலத்தடிநீர் மட்டமானது வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு மக்களுக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை வட்டத்தில் பல்வேறு நீர்நிலைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்காமல் வியாபார நோக்கில் மண்ணை திருடி விற்பனை செய்த நபர்கள் மீது தனி விசாரணை குழு மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை பாளையங்கோட்டை வட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளில் மண் அள்ள முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory