» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் கடந்த 8 மாதங்களில் 28 பேர் கொலை: போலீசார் திணறல்!!
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 10:29:01 AM (IST)
நெல்லையில் கடந்த 8 மாதங்களில் 28 கொலை நடந்துள்ள நிலையில், குற்றங்களை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் சமீப காலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாதம் 2 அல்லது 3 கொலைகள் அரங்கேறி வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டாலும் கூட, கொலை சம்பவங்களை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு 8 மாதங்களில் 17 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில் வள்ளியூர் உட்கோட்டத்தில் மட்டும் 6-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்து உள்ளன.
சமீபத்தில் ராதாபுரம் பகுதியில் பிரபுதாஸ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதற்கு முன்பாக அவரை காரை வைத்து மோதி கொலை செய்ய முயன்றதாகவும், அப்போதே போலீசார் குற்றவாளிகளை கைது செய்து இருந்தால் பிரபுதாஸ் தற்போது உயிருடன் இருந்து இருப்பார் என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாநகரில் கடந்த 8 மாதங்களில் 11 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில் கடைசியாக கே.டி.சி. நகரில் நடந்த கவின் ஆணவக்கொலை தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் "அதிகமான கொலைகள் இருதரப்பினர் இடையே ஏற்படும் திடீர் மோதல்களால் நிகழ்ந்துள்ளன. முன்விரோதம், பழிக்குப்பழியாக கொலைகள் நடக்கவில்லை. நடக்க இருந்த கொலைகள் பல தடுக்கப்பட்டு உள்ளன. குற்றவாளிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!
புதன் 10, டிசம்பர் 2025 4:45:40 PM (IST)


