» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வடக்கன்குளம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய நற்கருணை பவனி : திரளானவர்கள் பங்கேற்பு
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 8:40:47 AM (IST)

வடக்கன்குளம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய திருவிழா நற்கருணை பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
வடக்கன்குளம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. 8-ம் திருநாளான நேற்று இரவு நற்கருணை பவனி நடைபெற்றது. அருட்தந்தையர்கள் மார்ட்டின், ஜான் பிரிட்டோ, இருதயராஜ், தேவராஜன், லியோன், ராஜன், ததேயூஸ்ராஜன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆலயத்தில் இருந்து புறப்பட்ட நற்கருணை பவனி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. 9-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு அன்னைக்கு பொன்மகுடம் சூட்டும் நிகழ்ச்சி, மாலை 6.30 மணிக்கு மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடைபெறும். அதிகாலை 1 மணிக்கு அன்னையின் அதிசய தேர் பவனி நடைபெறுகிறது.
10-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திருவிழா திருப்பலி, ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடக்கிறது. பின்னர் அன்னையின் அதிசய தேர் பவனி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் கிறிஸ்டியன், உதவி பங்குத்தந்தை அமல்ராஜ் மற்றும் நிதிக்குழுவினர், இறைமக்கள் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)




