» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்மண்டல சாரண சாரணிய இயக்க பெருந்திரளணி சாம்பவர் வடகரை அரசு பள்ளி முதலிடம்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 8:11:20 PM (IST)

தென்மண்டல சாரண சாரணிய இயக்க பெருந்திரளணியில் தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி சாரணர்கள் முதலிடம் பிடித்தனர்.
சாரண சாரணிய இயக்கம் தென்மண்டல பெருந்திரளணி திருநெல்வேலி மாவட்டம் மருதக்குளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் 21.08.2025 முதல் 23.08.2025 வரை நடைபெற்றது. இதில் 39 கல்வி மாவட்டத்தில் 700 சாரண சாரணியர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி சாரணர்கள், தலைமை ஆசிரியர் பா.பிரபாவதி வழிகாட்டுதலின்படி கூடாரம் அமைத்தல் போட்டியில் முதலிடமும் colour party இரண்டாம் இடமும் பெற்று மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்துள்ளார்கள்.
பெருந்திரளணியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் போட்டியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் கேடயம் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. சிவக்குமார் அய்யா அவர்களிடம் பெறும் நிகழ்வுகள். சாரண ஆசிரியர் மற்றும் மாவட்ட பயிற்சி ஆணையர் சி.நடராஜன் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து பல்வேறு போட்டிகளில் பங்கு பெறச் செய்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பா. பிராபாவதி அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)


