» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை உடையார்பட்டி குளம் தூர்வாரும் பணி: ஆட்சியர் துவக்கி வைத்தார்.
வியாழன் 25, செப்டம்பர் 2025 8:38:07 AM (IST)

நெல்லை உடையார்பட்டி குளத்தினை அமலைசெடிகளை அகற்றி தூர்வாரி, நடைபாதை அமைக்கும் பணியை ஆட்சியர் சுகுமார் துவக்கி வைத்தார்.
நெல்லை மாவட்டத்தில் தனியார் துறை பங்களிப்புடன் பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதில் பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய், தாமிரபரணி ஆறு உள்பட பல இடங்களை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதில் உடையார்பட்டி குளத்தினை அமலைசெடிகளை அகற்றி தூர்வாரி, நடைபாதை அமைக்கும் பணியை போஸ் நிறுவனத்தில் நிதி உதவியுடன் எஸ்னரோ நிறுவனத்தின் மேற்பார்வையில் நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் துவக்கவிழா உடையார்பட்டி குளத்துக்கு கரையில் வைத்து நடந்தது. மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமை வகித்து கொடியசைத்து இந்த பணியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் எக்ஸ்னரோ பவுன்டேசன் தலைவர் செந்தூர் பாரி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, திட்ட அலுவலர் சரவணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோவிந்த ராஜ், பாஸ் பிளான்ட் பஞ்சு அருணாசலம் உள்பட பலர் பேசினர். முன்னதாக முத்து ராம் தியேட்டர் முன்பு இருந்து பிளாஸ்டிக்கு ஒழிப்பு மாணவர்கள் நடத்திய பேரணி நடந்தது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.சுகுமார் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, லயன்ஸ் கிளப் திருநெல்«வி கிரின் சிட்டி பொன் திருமலை முருகன் 12 வது வார்டு கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ், எஸ்னரோ நிறுவனத்தினை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீனிவாசன், சி.எஸ்.ஆர் ஆலோசகர் இராதா சீனிவாசன், மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெளியப்பன், திட்ட ஒருங்கிணைப்பாளர் நிசாந்து, செந்தில் குமார், ம.தி.தா இந்து கல்லூரி தமிழ் துணை பேராசிரியர் இலக்குவன், கிராம உதயம் துணை இயக்குனர் புகழேந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க. கவுன்சிலர்களின் தயவால் தி.மு.க. பெண் சேர்மன் பதவி தப்பியது!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:36:32 PM (IST)

திருநெல்வேலியில் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 2, அக்டோபர் 2025 12:23:25 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 19,879 நபர்கள் பயன்: ஆட்சியர் தகவல்!
புதன் 1, அக்டோபர் 2025 10:20:11 AM (IST)

நெல்லையில் செல்போன், பணம் பறிப்பு வழக்குகளில் 5 பேர் கைது
புதன் 1, அக்டோபர் 2025 8:44:07 AM (IST)

காந்தி ஜெயந்தி: அக்.2ம் தேதி மது விற்பனைக்கு தடை - ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:42:09 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாதுன் நபி விழா
திங்கள் 29, செப்டம்பர் 2025 8:31:18 AM (IST)
