» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உதவி டிராக்டர் ஆபரேட்டர் பயிற்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
வியாழன் 25, செப்டம்பர் 2025 3:41:08 PM (IST)
நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் உதவி டிராக்டர் ஆபரேட்டர் இரண்டாம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட் 2025-26 அறிவிப்பு எண்.46-ன்படி கிராமப்புற இளைஞர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக Assistant Tractor Operator இரண்டாம் கட்ட பயிற்சி உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை), அரசு இயந்திர கலப்பை பணிமனை, திருநெல்வேலி அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
மேற்காணும் Assistant Tractor Operator பயிற்சி வகுப்பு 15 முதல் 30 நபர்களுக்கு 27 நாட்கள் நடத்தப்படும். இப்பயிற்சியில் டிராக்டர் இயந்திரங்களை விவசாய இணைப்புக் கருவிகளுடன் இயக்கிடவும், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு, டிராக்டர் இன்ஜின் செயல்பாடு, பழுதுநீக்கம் மற்றும் பராமரிப்பு குறித்து தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 2025-26ஆம் நிதி ஆண்டில் 2ம்கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . Assistant Tractor Operator பயிற்சி 26.09.2025 அன்று பயிற்சி துவங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி இல்லை மற்றும் வயது வரம்பு 18 முதல் 35 வயது ஆகும். மேற்படி, பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் சமீபத்திய புகைப்படம் -ஆகியவற்றை உதவி செயற் பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல் துறை), அரசு இயந்திர கலப்பை பணிமனை, எண்.1, டிராக்டர் வீதி, என்.ஜி.ஓ காலனி, திருநெல்வேலி அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது https://candidate.tnskill.tn.gov.in என்ற இணையதள வாயிலாகவோ தங்கள் பெயரினை பயிற்சிக்கு பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், இப்பயிற்சி வகுப்பு முடிந்ததும் தகுதிவாய்ந்த பயிற்சியாளருக்கு டிராக்டர் ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தர ஆவன செய்யப்படும் என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் விபரங்களுக்கு 0462-2900766, 99409 26195 மற்றும் 88386 00112 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)

மாநில வில் வித்தை போட்டி: வீரவநல்லூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:09:21 AM (IST)

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)




