» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் பயணிகள் சங்கம் கோரிக்கை!
வெள்ளி 3, அக்டோபர் 2025 12:36:14 PM (IST)

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் கவிஞர் கல்லிடைக்குயில் உமர் பாரூக், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், "திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி நிலையத்தில் தினந்தோறும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
ஆண்டுக்கு சுமார் 1.33 கோடி ரூபாய் வருவாய் வருகிறது. மீட்டர் கேஜ் காலத்தில் மூன்று தண்டவாளங்களுடன் 24 மணி நேரமும் நிலைய மேலாளருடன் பிளாக் ஸ்டேஷன் அந்தஸ்து பெற்று இருந்தது. அகலப் பாதையாக மாற்றப்பட்டப் பிறகு தரம் குறைக்கப்பட்டு,ஒற்றைத் தண்டவாளத்துடன் இயங்கி வருகிறது.
மதுரை ரயில்வே மண்டலத்தில் அதிக வருவாய் தரும் ரயில் நிலையங்களில் 22 ஆம் இடத்தில் கல்லிடைக்குறிச்சி உள்ளது. இத்தகு சிறப்பு பெற்ற கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின் பகிர்மான கழக நெல்லை மண்டலத்தின் புதிய தலைமை பொறியாளர் பொறுப்பேற்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 4:04:39 PM (IST)

பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடை விரிவாக்கப் பணி: பயணிகள் மகிழ்ச்சி!
வியாழன் 9, அக்டோபர் 2025 12:45:42 PM (IST)

கல்லூரி மாணவிகளுக்கான மாநில ஹாக்கி போட்டி: சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
புதன் 8, அக்டோபர் 2025 3:40:06 PM (IST)

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் தகவல்!
திங்கள் 6, அக்டோபர் 2025 3:39:02 PM (IST)

நெல்லையில் அன்புமணியின் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு
திங்கள் 6, அக்டோபர் 2025 12:51:24 PM (IST)

வங்கி மேலாளரிடம் நூதன முறையில் ரூ.47 லட்சம் மோசடி: நெல்லை வாலிபர் கைது!
திங்கள் 6, அக்டோபர் 2025 10:11:45 AM (IST)

Monnamohamed M rtd. Prison dept. Officio Kallidai kurichiOct 5, 2025 - 04:31:56 PM | Posted IP 162.1*****