» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சமூக வலைதளங்களில் பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக கருத்து: யூடியூபர் கைது!
சனி 4, அக்டோபர் 2025 4:10:41 PM (IST)
சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக முகத்தை மூடி பேசி வந்த ஆலங்குளத்தைச் சேர்ந்த திலீபன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை மகன் திலீபன் (35), - உளறி கொட்டவா - எனும் தனது யு-டியூப் பக்கத்தில் பெண்களை அவ மதிக்கும் விதமாகவும், பெண் குழந்தைகள் அதிக மாகப் பிறப்பதால் பெற்றோர் பாதிக்கப்படுவதாகவும் கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.மேலும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியும் உரிமையை பெற்றோர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாகவும் திலீபன் பேசினார்.
தமது முகத்தை பாதியாக மறைத்துக் கொண்டு வீடியோ வெளியிடும் அவர் மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக தென்காசி சைபர் கிரைம் பிரிவிற்கு புகார்கள் வந்தன. விசாரணை நடத்திய போலீசார், திலீபனை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 25, நவம்பர் 2025 7:48:43 PM (IST)

விவசாய மின் இணைப்பிற்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய பொறியாளர் கைது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:55:30 PM (IST)

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவானவர் கைது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:43:37 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 46.42 சதவீதம் படிவங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம்: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:02:21 AM (IST)

தென்காசி விபத்தில் உயிரிழப்பு 8 ஆக உயர்வு : பஸ்சின் உரிமம் ரத்து!
செவ்வாய் 25, நவம்பர் 2025 8:38:27 AM (IST)

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை ஜாமீன் மனு மீது நவ.27ல் விசாரணை!
திங்கள் 24, நவம்பர் 2025 5:19:39 PM (IST)




